நாக்பூர்: "தோனிக்குப்பதில் கேப்டன் பதவியில் விராத் கோஹ்லியை அமர்த்த நேரம் வந்துவிட்டது,'' என, கவாஸ்கர் தெரிவித்தார்.
டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 8 போட்டிகளில் தோற்றது. தற்போது இந்திய மண்ணிலும் இங்கிலாந்திடம் தொடரை இழந்துள்ளது. இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நாக்பூர் டெஸ்டில் சதம் அடித்து அசத்திய இளம் விராத் கோஹ்லி வசம் கேப்டன் பதவியை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:
நாக்பூர் டெஸ்டின், நான்காவது நாள் வரை, தோனிக்கு மாற்று வீரர் யாரும் இல்லை என்று தான் கூறினேன். ஆனால், கோஹ்லி சதம் அடித்து பின், இவரிடம் உள்ள திறமை வெளிப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில், இவர் கேப்டன் பதவிக்கு தயாராகிவிட்டார்.

